புதறானை ஸ்ரீசித்தி விநாயகர்

'விநாயகனே வெவ்வினையை வேரறுக்கவல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாந் தன்மையினால் கண்ணிற் பணிமின் கனிந்து'   மாபெரும் சிவபக்தனான இலங்கேஸ்வரன் இராவணன் கோலோச்சி எங்கள் ஈழவள திருநாட்டின் வடபால் ஐந்தாம் குரவரென்று போற்றிப் பூசிக்கப்படும் சைவப் பெருந்தகை ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரவர்கள் வாழ்ந்த நல்லைநகர் யாழ்ப்பாணத்திற்கு வடமேற்காக 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ள வளம்மிக்க சிற்றூரே வடலியடைப்பு. இக்கிராமம் ...

மேலும் வாசிக்க→

சுதுமலை சிந்மயபாரதி வித்தியாலயம்

சுதுமலைக் கிராமத்திலே சைவச் சிறார்கள் கல்வி கற்கவேண்டும் என்ற நோக்குடன் திரு. நா. ஆறுமுகபிள்ளை சிந்நயபிள்ளை அவர்கள் சின்னையா பள்ளிக்கூடம் என்ற பெயரில் 1885 யூன் 15ம் திகதி சுதுமலை சிந்மயபாரதி வித்தியாலயம் பாடசாலையை ஆரம்பித்தார். ஏறத்தாழ 40 ஆண்டுகள் தமது சேவையை இப் பாடசாலைக்கு ஆற்றியுள்ளார். இவரது காலத்தில் ஆரம்பப் பிரிவுப் பகுதியே ஆரம்பிக்கப்பட்டது. 'தண்ணீர்க் ...

மேலும் வாசிக்க→

டாக்டா்.மு. மாசிலாமணி

டாக்டா்.மு. மாசிலாமணி அவர்கள் மட்டக்களப்பில் வைத்திய துறையில் ஆழத் தடம் பதித்த ஒரு பெரியவர். ஆரையம்பதி மக்கள் எவரேனும் உடல்நலம் குன்றிப்போனால் சிறுவா்கள் முதல் முதியவர்கள் வரை சொல்வது ‘மாசிலாமணி ஐயாட்ட போய் ஓரு கலவை எடுத்தா எல்லாம் சரியாய் போயிடும்‘ இவ் கதையில் துளியெனும் பொய்யில்லை என்பது மட்டக்களப்பு மாவட்டத்தில் இவரிடம் வைத்தியத்திற்கு வந்து போன ...

மேலும் வாசிக்க→

ஏரம்பமூா்த்தி – சைவபுராண சிந்தாமணி

மட்டக்களப்பு ஆரையம்பதியில் புராண பாராயணம் பாடுவதில் சிறந்தவராக வாழ்ந்தவர் ஏரம்பமூர்த்தி ஆவார். அறிமுகம்   முத்தமிழின் மேன்மையெலா முரைக்குமுது நூல்கள் முனிவா்தரும் ஆகமங்கள் புராணமறை யாவும் சித்தரித்த பெரும்கருத்தை சிந்தனையிற் கொண்டு சிறக்கவுரைத் ததன்பேறாய்ப் புரணமணிப்பட்டம் முத்துமணி மகுடமென முகமலா்ந்தே ஏற்று முதன்மை பெறச் சீடா்களை மென்மேலும் ஆக்கி ஏத்திசையும் புகழ்முருகப் பணிபுரிவண் ணக்கா் ஏரம்ப மூா்த்தியும் வாழ் ஆரையூரெம் நாடே......   என்று ஆரையூா் நல். அழகேசமுதலியார் தனது மண்ணி்ன் ‘பொரியார் ...

மேலும் வாசிக்க→

குமாரசுவாமி ஐயர்

சைவத்தையும் தமிழையும் வளர்க்கவென பிறந்த அறிஞர்களில் மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ்ப்புலவர் குமாரசுவாமி ஐயர் அவர்களும் மிக முக்கியமானவர். விபுலாநந்த நாவலருக்குச் சங்கதமொழிக் கல்வியைத் தொடங்கி வைத்த தமிழ்ப் புலவர் ஒருவர் நம்மிடை ஆடரம்பரமின்றி வாழ்ந்து மறைந்துள்ளார். மட்டக்களப்பு ஆரைப்பற்றை சேர்ந்த தமிழ்ப்புலவர் குமாரசுவாமி ஐயர் தமது சைவநெறி குன்றாத வைதிக வாழ்வினால் 'ஐயர்' என்று குறிப்பிடப்பெற்ற சிறப்புடையவர் ஆவார். ...

மேலும் வாசிக்க→